அமுரிதாரணை
உடலிற் கிடந்த வுறுதிக் குடிநீர்க் கடலிற் சிறுகிணற் றேற்றமிட் டாலொக்கும் உடலில் ஒருவழி ஒன்றுக் கிறைக்கில் நடலைப் படாதுயிர் நாடலு மாமே 1
தெளிதரும் இந்தச் சிவநீர் பருகில் ஒளிதரு மோராண்டில் ஊனமொன் றில்லை வளியுறும் எட்டின் மனமும் ஒடுங்குங் களிதருங் காயங் கனகம தாமே 2
நூறு மிளகு நுகருஞ் சிவத்தினீர் மாறும் இதற்கு மருந்தில்லை மாந்தர்கள் தேறில் இதனைத் தெளியுச்சி கப்பிடின் மாறும் இதற்கு மறுமயி ராமே 3
கரையரு கேநின்ற கானல் உவரி வரைவரை என்பர் மதியிலா மாந்தர் நுரைதிரை நீக்கி நுகரவல் லார்க்கு நரைதிரை மாறு நமனுமங் கில்லையே 4
அளக நன்னுத லாயோ ரதிசயங் களவு காயங் கலந்தஇந் நீரிலே மிளகு நெல்லியும் மஞ்சளும் வேம்பிடில் இளகும் மேனி இருளுங் கபாலமே 5
வீர மருந்தென்றும் விண்ணோர் மருந்தென்றும் நாரி மருந்தென்றும் நந்தி அருள்செய்தான் ஆதி மருந்தென் றறிவார் அகலிடஞ் சோதி மருந்திது சொல்லவொண் ணாதே 6