பாத்திரம்
திலமத் தனையே சிவஞானிக்கு ஈந்தால் பலமுத்தி சித்தி பரபோக மும்தரும் நிலமத் தனைபொன்னை நின்மூடர்க்கு ஈந்தால் பலமும்அற் றேபர போகமும் குன்றுமே. 1
கண்டிருந் தாருயிர் உண்டிடுங் காலனைக் கொண்டிருந் தாருயிர் கொள்ளும் குணத்தனை நன்றுணர்ந் தார்க்கருள் செய்திடு நாதனைச் சென்றுணர்ந் தார்சிலர் தேவரு மாமே. 2
கைவிட்டி லேன்கரு வாகிய காலத்து மெய்விட்டி லேன்விகிர் தன்அடி தேடுவன் பொய்விட்டு நானே புரிசடை யானடி நெய்விட் டிலாத விடிஞ்சிலு மாமே. 3
ஆவன ஆவ அழிவ அழிவன போவன போவ புகுவ புகுவன காவலன் பேர்நந்தி காட்டித்துக் கண்டவன் ஏவன செய்யும் இளங்கிளை யோனே. 4